'

அரச கரும மொழி (வாய்மொழிப்பரீட்சை)




அரசகரும மொழி வாய்மொழிப் பரீட்சை தொடர்பாக அரச கரும மொழிகள் திணைக்ககளம் விசேட அறிவித்தல் ஒன்றை 12 பெப்ரவரி 2021 ஆம் திகதி வௌியிட்டுள்ளது.


2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடாத்தப்படவிருந்த மேற்படி பரீட்சை (01.01.2020 தொடக்கம் 31.07.2020 வரை நிகழ்நிலையில் விண்ணப்பித்தோர்) 1ம் மட்டத்திற்கு மாத்திரம் 23.02.2021 தொடக்கம் 12.03.2021 வரை நடைபெறும்.


மேற்படி பரீட்சைக்கு விண்ணப்பப்படிவம் கிடைக்காதோர் தமது பெயர் பின்வரும் பட்டியலில் இருப்பின் உரிய தினத்தில் வருகை தந்து அனுமதி அட்டையின் பிரதியைப் பெற்றுக் கொள்ளலாம்.

ORAL SINHALA

ஏனைய மட்டங்களுக்கான பரீட்சை மார்ச் 16 இற்கு பின்னர் நடைபெறும். குறித்த விண்ணப்பதாரிகள் விண்ணப்பப் படிவம் மற்றும் பரீட்சை கால அட்டவணை போன்றன இணையத்தளத்தில் வௌியிடப்படும்.


மேலதிக தகவல்கள் மற்றும் பரீட்சகர்களுக்கான அறிவித்தல்களுக்கு பின்வரும் இணைப்பை அழுத்தவும்

அரச கரும மொழி (வாய்மொழிப்பரீட்சை)


செய்திகள், அரசகரும மொழி, வாய்மொழி