'

W & OP மீள் பதிவு செய்பவர்களுக்கான அறிவித்தல்

 


W & OP மீள்பதிவு தொடர்பாக விசேட அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. இணையத்தில் தமது W& OP அட்டை இல்லாத அனைவரும் எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதிக்கு முன்னர் தம்மை மீள பதிவு செய்து கொள்ளல் வேண்டும் என ஏற்கனவே சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டுள்ள நிலைமையில், தற்போது அரச ஊழியர்கள் மேற்படி மீள்பதிவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
guruwaraya.lk

மீள்பதிவு செய்பவர்கள் தமது தகவல்களை நிகழ்நிலையில் சமர்ப்பித்ததன் பின்னர் தமது தனிப்பட்ட கோவைக்கு பொறுப்பான அலுவலர் அதனை உறுதிப்படுத்திய பின்னரே குறித்த W & OP அட்டை இணையத்தில் காட்சிப்படுத்தப்படும்.
guruwaraya.lk

இதனடிப்படையில் தமது ஆவணங்களை நிகழ்நிலையில் சமர்ப்பித்து, அவர்களின் தகவல்கள் உறுதிப்படுத்தப்படாதவர்கள் இருப்பின் அவர்களின் கைத்தொலைபேசி இலக்கத்திற்கு குருஞ்செய்தி ஒன்று அனுப்பப்படும்.




அவர்கள் உடனடியாக தமது கோவைக்குப் பொறுப்பான அலுவலரை சந்தித்து, மேற்படி தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ள அவரை அறியப்படுத்த வேண்டும். அவர்கள் மேற்படி தகவல்களை உறுதிப்படுத்தியதன் பின்னர் குறித்த W & OP அட்டை இணையத்தில் காட்சிப்படுத்தப்படும்.
guruwaraya.lk

மேற்படி SMS வரும் போது ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள் அது தொடர்பில் நடவடிக்ைககள் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.


மீள் பதிவு வழிகாட்டல்களுக்கு பின்வரும் இணைப்பை அழுத்தவும்