'

பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ் பிரதிகளை நிகழ்நிலையில் பெற்றுக் கொள்ளல்



பதிவாளர் நாயகத் திணைக்களத்தினால் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ் பிரதிகளை நிகழ்நிலையில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளவதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உயர்ந்த பட்சம் 5 பிரதிகளைப் பெற்றுக் கொள்ளலாம். நேரடியாக அல்லது விரைவுத் தபால் மூலம் பெற்றுக் கொள்ளலாம். கட்டணம் செலுத்தும் முறை குறுந்தகவல் அல்லது ஈமெயில் மூலம் அறிவிக்கப்படும்.

இச் சேவை எதிர்வரும் ஆகஸ்ட் 4 ஆம் திகதி முதல் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

கட்டணங்கள் தொடர்பில் 4 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த இணையத்தளத்தில் பதிவேற்றப்படும். விண்ணப்பிக்கும் போது குறித்த சான்றிதழின் மென்பிரதி பதிவேற்றம் செய்யப்படல் வேண்டும்.


மேலதிக தகவல்களுக்கு பின்வரும் இணைப்பில் பார்க்கவும்

நிகழ்நிலை விண்ணப்பம்